tamilnadu

img

க்யூஆர் கோடு மூலம் பண பரிவர்த்தனையை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில், அனைத்து கடைகள் மற்றும் ஹோட்டல்களில், க்யூஆர் கோடு (Quick Response Code) மூலம் பணப் பரிவர்த்தனையை கட்டாயமாக்க மத்திய அரசு முயன்று வருகிறது.

இந்த க்யூஆர் கோடு முறையின் மூலம் டிஜிட்டல் கட்டண கருவியை வழங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களுக்கும் இது கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த முறையின் மூலம், ஜிஎஸ்டி சலுகைகள் கிடைப்பது தவிர பணமில்லா பரிவர்த்தனையை கட்டாயமாக்கும் நடைமுறையை கொண்டுவரவும், டிஜிட்டல் பேமெண்ட் முறையை அதிகப்படுத்துவதன் மூலம் ஜி.எஸ்.டி-யை வலுப்படுத்தவும் மத்திய அரசு முயன்று வருகிறது. மேலும் ஜிஎஸ்டி இன்வாய்ஸ்களிலும், இந்த க்யூஆர் கோடு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மக்களை தேர்தல் முடிவுக்கு பின் செயல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

க்யூஆர் கோடு என்பது ஒரு பெரிய சதுரத்தில் பல்வேறு சிறுசிறு உள் சதுரங்கள் கொண்டது. வேண்டிய தகவல்களை கருப்பு வெள்ளைச் சதுரங்களாக மாற்றிவிடும். க்யூ.ஆர் கோட்டில் எண்கள், எழுத்துகள், இணையதள முகவரிகள் போன்ற அனைத்துத் தகவல்களையும் எளிதாக கொடுத்து விடலாம். இந்த க்யூ.ஆர் கோடை, ஸ்கேனரைக் கொண்டு ஸ்கேன் செய்தால், அந்த சதுரத்தில் உள்ள அனைத்து தகவலை காண முடியும். இது ஆட்டோமொபைல் துறைக்காக முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.